பழைய தமிழ் படங்களில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இதை இருக்கும் அனைத்து படங்களையும் சூப்பர் ஹிட் கொடுத்தவர். இவர் நடித்த முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், மருதமலை, ஏழுமலை, ஆணை, கர்ணா, மதராசி, சிரி, வானவில் மற்றும் துறை போன்ற படங்கள் இவரின் சூப்பர் ஹிட் படங்கள் ஆகும். இதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அக்காலத்தில் இவர் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். இதற்காகவே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். 

Arjun

    இவர் தற்போது தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதாவது நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வரிபட்டா என்னும் புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை எடுத்து முடித்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் மற்றும் மகேஷ்பாபுவின் காட்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மகேஷ்பாபுவிற்கு வில்லனாக நடிக்க பல பிரபலங்களிடம் படக்குழு கேட்ட நிலையில் அதற்கு நடிகர் அர்ஜுன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

2 Comments

Post a Comment

Previous Post Next Post